திரைப்பட ஒளிப்பதிவாளராக தன் திரை வாழ்க்கையை துவங்கிய திரு.இளவரசு அவர்கள், இன்று ஒரு தேர்ந்த நடிகராக திகழ்ந்து வருகின்றார். ‘இயக்குநர் இமயம்’ திரு.பாரதிராஜா அவர்களின் திரைப்படங்களிலும், பிரபல இயக்குநர் திரு.சேரன் அவர்களின் திரைப்படங்களிலும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்ததின் மூலம், நடிகராகவும் நன்கு அறியப்பட்டார். ‘மனம் விரும்புதே உன்னை’ ஒளிப்பதிவிற்காக மாநில அரசு விருதினைப்பெற்றவர்.
திரு.பாரதிராஜா அவர்களின் “வேதம் புதிது” திரைப்படத்தில் துவங்கி, இன்று வரை பல படங்களில், இணைக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார்.