P. N. சுந்தரம்

திரு. PN. சுந்தரம் (3 November 1927 – 22 March 2010) 200க்கும் அதிகமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்திப் படங்களில் பணிபுரிந்த ஒரு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராவார். 1950களில் அவர் ஒரு கேமரா உதவியாளராக விஜய வாஹினி ஸ்டூடியோவில் திரு. வின்சென்டின் கீழ் பணிபுரிந்தவர். பின்னாளில், ஃபிலிம் எம்ப்ளாயிஸ் பெடரேஷன் ஆஃப் சௌத் இந்தியா (FEFSI)யின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மேலும் அவர் சௌத் இந்தியன் சினிமாடொகிராபர்ஸ் அசோசியேஷன் (SICA)வின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார்.

மலையாளத்தில் ஏழு படங்கள் உட்பட, பல படங்களை அவர் இயக்கியுள்ளார். 1968ல், உயர்ந்த மனிதன் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளராக அவர் தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றவர்.

x
^