Nov 15 2017

Views: 3145

 

உலகத் திரைப் படைப்பாளிகளில் முக்கியமான ஒரு முன்னோடி ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா. அவர் இயக்கிய மூன்று காட்ஃபாதர் படங்களும், ‘செய்நேர்த்தியும், முழுமையும், தனித்துவமும் கொண்ட படம்’ என்றால் என்ன என்பதற்கு எக்காலத்திலும் உதாரணமாக விளங்கக்கூடியவை. அவருடைய அபொகாலிப்ஸ் நவ், டிராகுலா போன்ற படங்களும் திரைப்பட ஆர்வமுள்ள எவரும் அவசியம் பார்க்கவேண்டியவை. ஏராளமான புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் விளங்குபவர் அவர்.

ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா இயக்கிய காட்ஃபாதர் படங்கள், அதிலும் முதல் இரண்டு பகுதிகள் ஏன் அத்தனை முக்கியமானவையாக உலக அளவில் கருதப்படுகின்றன? வன்முறை, குற்றங்கள், நிழல் உலகம் பற்றி அதற்கு முன்னும் பின்னும் பல படங்கள் வந்திருக்கின்றன. காட்ஃபாதர்-யில் இருக்கும் மிகச் சிறந்த கலையம்சம் தான் அதற்குக் கிடைத்திருக்கும் எல்லா மரியாதைகளுக்கும் காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எந்த சிறந்த படத்திலும், மூலக்கதை, திரைக்கதையாக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, இயக்கம் போன்ற துறைகள் எல்லாமே சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அந்த எல்லாத் துறைகளிலும் அதனதன் உச்சங்களைத் தொடும்படியான நுணுக்கத்தோடும், அதற்குமுன் செய்யப்பட்டிருக்காத தனித்தன்மையோடும், ஒரே படத்தில் சேர்ந்து அமைந்துவிடுவது என்பது மிக அரிது. ‘காட்ஃபாதர்’ ‘காட்ஃபாதர் 2’ படங்களில் கூடிவந்திருக்கும் நேர்த்தி உலக அளவில் மிகக் குறைவான படங்களிலேயே அமைந்திருக்கிறது.
திரைப்பட மாணவர்கள் மற்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா அளித்த பதில்களின் தமிழாக்கம் இது.

 

காட் ஃபாதர்” படப்பிடிப்பில் மர்லன் பிராண்டோவுடன் கொப்பலா
ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா :

சமீபத்தில் நான் ஒரு படத்தின் (Twixt, 2011) படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சொன்னேன், “நான் இன்று நிறைய கற்றுக்கொண்டேன்” என்று. ஆக, 45 ஆண்டுகள் திரைப்படத் துறையில் இருந்துவிட்டு, ஒரு சின்ன படத்தின் வேலைகளை முடித்து நான் வீட்டுக்குத் திரும்பி ‘இன்று நான் ஏராளமாகக் கற்றேன்’ என்று சொல்லமுடியுமானால், அது சினிமாவைப் பற்றிய ஒன்றை நமக்குக் காட்டுகிறது. ஏனென்றால் சினிமா மிக இளமையானது. அதற்கு வெறும் 100 வயதே ஆகிறது.

திரைப்படத்தின் ஆரம்ப நாட்களிலும், எப்படி திரைப்படம் எடுப்பதென்று யாருக்கும் தெரியாது. அவர்களிடம் ஒரு பிம்பப் படம் இருந்தது, அது அசைந்தது, அதைப் பார்வையாளர்களும் ரசித்தார்கள். ஒரு புகைவண்டி ரயில் நிலையத்துக்குள் வரும் படத்தை, வெறுமனே அசைவின் அழகை ரசிப்பதற்காகவே அப்போது மக்கள் பார்த்தார்கள்.

திரைமொழி என்பது, அசையும் பிம்பங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் தொடர்ச்சியான சோதனைகளின் விளைவாக உருவாகி வந்ததுதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதல் 15-20 ஆண்டுகளுக்குள்ளாகவே அது ஒரு வணிக நிறுவனமாக மாறிவிட்டது. சினிமாவின் மூலம் பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் திரைக்கலையின் ஆரம்ப கர்த்தாக்களைப் பார்த்து “சோதனைகளில் ஈடுபடாதீர்கள். நாங்கள் சம்பாதிக்க வேண்டும். ஆகவே வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா என்று தெரியாத எதையும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்கள்.

எந்தக் கலைக்கும் மிக அடிப்படையான ஒன்று ரிஸ்க். நீங்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை என்றால், முன்பு எப்போதும் பார்த்திராத நிஜமான அழகுள்ள ஒன்றை எப்படி நீங்கள் புதிதாக உருவாக்க முடியும்? ரிஸ்க் இல்லாமல் சினிமா எடுப்பதென்பது, உடலுறவு இல்லாமலே குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பதைப் போன்றது. நீங்கள் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று இதற்குமுன் எடுக்கப்படாத ஒரு படத்தை உருவாக்க விரும்புவதாகச் சொன்னால், அவர் உங்களை வெளியே தள்ளிவிடுவார், ஏனென்றால் அவர்களுக்கு எது வெற்றியடைந்ததோ, எது பணத்தைக் கொட்டியதோ அதேதான் மீண்டும் மீண்டும் வேண்டும். இன்னும் 100 வருடங்களில் சினிமா பெரிய அளவில் மாறிவிடும் என்றபோதும் அந்த மாற்றம் மிக மெதுவாகவே நடக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் இவர்கள்தான் உங்களை ரிஸ்க் எடுக்க விடுவதே இல்லையே.

நான் எந்த சினிமாவில் இருக்க விரும்புகிறேன் என்றால், நூறு வருடங்களுக்கு முன் அது தோன்றிய காலத்தில், எப்படிப் படமெடுப்பது என்றெ தெரியாத, புதிய சாத்தியங்களை நாம்தான் கண்டறிய வேண்டும் என்கிற நிலையில் இருக்கிற சினிமாவில்.

 

 

Francis Ford Coppola
‘ரிஸ்க் எடுப்பவர்’ என்பதே உங்கள் அடையாளம் என்று இப்போது நீங்கள் நினக்கிறீர்களா?

கொப்பலா : நான் எப்போதுமே ஒரு நல்ல சாகஸக்காரன். ரிஸ்க்குகளைப் பார்த்து ஒருபோதும் நான் பயந்தது இல்லை. எனக்கு ரிஸ்க்-ஐப் பற்றி ஒரு நல்ல தத்துவம் எப்போதுமே உண்டு, “ஓ.. நான் இதைச் செய்திருக்கலாமே” என்று நமது மரணப் படுக்கையில் புலம்பும்படியாக நாம் வாழ்க்கையை வீணாக்குவது மட்டும்தான் ஒரே ரிஸ்க். அதுதான் என் தத்துவம். நான் செய்யவிரும்பியவை எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன், இனிமேலும் அப்படியே.
நீங்கள் ஒரு மாணவனுக்குச் சொல்ல விரும்பும் மிகவும் பயனுள்ள குறிப்பு என்ன?

கொப்பலா : நீங்கள் பேப்பரில் ஏதாவது எழுதிவைக்கும்போது முதலில் அந்தத் தேதியை அதில் எழுதுங்கள், எந்த மாதம், என்ன கிழமை, பிறகு அது எந்த இடம் என்பதை எழுதுங்கள். ஏனென்றால் நீங்கள் எழுதிவைக்கும் எந்த ஐடியாவும் உங்களுக்கு உதவக்கூடியதே. தேதியை எழுதிவைப்பதை ஒரு பழக்கமாகக் கொள்வதன் மூலம், பிறகு நீங்கள் எப்போது அந்த குறிப்புகளைப் படித்தாலும், அந்தத் தேதியில் அந்த ஊரில் என்ன நடந்தது என்று உடனே மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிடும், அப்போதே அந்தக் குறிப்பு உங்களுக்குப் பயன்பட ஆரம்பித்துவிடும். எந்தத் திரைப்பட இயக்குனருக்கும் மிகமிக முக்கியமான கருவிகளில் ஒன்று அவர் எழுதிவைத்திருக்கும் குறிப்புகள் தான்.
ஒருவன் தனக்கான பாணியை உருவாக்கிக்கொள்வதற்கு முன்னோடிகளிடமிருந்து முற்றிலும் விலகிச் செல்வது அவசியமானதா?

கொப்பலா : ஒருமுறை பல்ஸாக் (Balzac), வேறொரு இளம் எழுத்தாளர் தன்னுடைய எழுத்தைத் திருடிப் பயன்படுத்திக் கொண்டதைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதைப் படித்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது, அவர் சொன்னார் “அந்த இளம் எழுத்தாளன் என்னிடமிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டதை அறிந்தபோது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியே உண்டானது” என்று. ஏனென்றால் அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறோம். முதலில் நீங்கள் எங்களிடமிருந்து திருட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஏனென்றால் உண்மையில் உங்களால் ‘திருடவே’ முடியாது. நீங்கள் எடுத்துக்கொண்டது எல்லாமே நாங்கள் உங்களுக்குத் தந்ததுதான். நீங்கள் அதை உங்களின் குரலிலேயே பதிவுசெய்வீர்கள். அப்படித்தான் உங்களின் சொந்தக் குரலை நீங்கள் கண்டடைய முடியும்.

அப்படித்தான் நீங்கள் ஆரம்பிக்க முடியும். பிறகு ஒருநாள் இன்னொருவர் உங்களிடமிருந்து திருடிக்கொள்வார். பல்ஸாக் தனது புத்தகத்தில் மேலும் குறிப்பிடுகிறார், ‘அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்ததற்குக் காரணம், அது என்னை மரணமில்லாதவனாக ஆக்குகிறது என்பதுதான். இன்னும் 200 ஆண்டுகள் கழித்து மக்களின் நடவடிக்கைகளில் ஏதோ ஒருவகையில் நானும் கலந்திருப்பேன் என்பதை இதன்மூலம் நான் அறிகிறேன்’ என்று.

ஆகவே உங்கள் கேள்விக்கு எனது பதில் இதுதான், ஒன்றைக் கடனாகப் பெறுவதோ, அல்லது எடுத்துக்கொள்வதோ, அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒருவரைப் போலவே ஒன்றைச் செய்துபார்ப்பதோ, சரியானதுதானா என்கிற கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை. ஏனென்றால் அது உங்களுடைய முதல் காலடி மட்டுமே. நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துத் தானே ஆகவேண்டும்.
ஒரு வளரும் கலைஞன், விநியோகம் மற்றும் வியாபாரத்துடனான இடைவெளியை எப்படி நிரப்பிக்கொள்ள வேண்டும்?

கொப்பலா : அந்த விஷயத்தில் நாம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அதிகபட்சமாக சில நூற்றாண்டுகளாகத்தான் கலைஞர்கள் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். கலைஞர்களுக்கு எப்போதும் பணம் கிடைத்ததில்லை. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு வள்ளல் இருப்பான், அந்த மாநிலத்தின் தலைவனோ, ஒரு பிரபுவோ, அல்லது ஒரு மத நிறுவனமோ இருக்கும். அல்லது அந்தக் கலைஞனுக்கு இன்னொரு தொழில் இருக்கும். எனக்கு அப்படி இன்னொரு தொழில் இருக்கிறது. நான் திரைப்படம் எடுக்கிறேன், ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல முடியாது. நான் என்னுடைய ‘வைன்’ தொழிலின் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறேன். நீங்களும் அதுபோல இன்னொரு வேலையையும் செய்துகொண்டே, காலையில் ஐந்து மணிக்கு எழுந்து உங்கள் திரைக்கதையை எழுதுங்கள்.

‘மெடாலிகா’ அல்லது ஏதாவதொரு ‘ராக் அண்ட் ரோல்’ பாடகர் மாபெரும் பணக்காரராக இருப்பதைப் பற்றிய எண்ணத்தை விடுங்கள், இனி எப்போதுமே அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் நாம் ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை இனி கலைகள் இலவசமாக ஆகிவிடலாம். இப்போது இளைஞர்கள் இசையையும் திரைப்படங்களையும் டவுன்லோடு செய்துகொள்வது சரியானதாகவே கூட இருக்கலாம். இதைச் சொல்வதற்காக என்னைச் சுட்டாலும் சுடுவார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், கலைக்கு கட்டாயம் ஒரு விலை இருக்கவேண்டுமென்று யார் சொன்னது? அப்படியானால் கலைஞர்கள் பணம் சம்பாதிக்கவேண்டுமென்றும் யார் சொன்னது?

பழங்காலத்தில், நீங்கள் ஒரு இசைக் கலைஞரென்றால் உங்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான ஒரே வழி உங்கள் வாத்தியக் குழுவினரைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சி நடத்துவது மட்டும்தான். அப்போது ஒலிப்பதிவு கிடையாது, அதனால் ராயல்டியும் இல்லை. ஆகவே நான் சொல்லுவேன், “சினிமாவுக்கும், பணம் சம்பாதிப்பது வசதியாக வாழ்வது என்பதற்கும் மனதளவில் இருக்கும் தொடர்பைத் துண்டிப்பதற்கு முதலில் முயற்சிசெய்யுங்கள்” ஏனென்றால் அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன.

.

ஒரு திரைக்கதாசிரியருக்கு மிகப் பெரிய சவால் எது?

கொப்பலா : ஒரு திரைக்கதை என்பது ஹைக்கூ போல இருக்கவேண்டும். மிகக் குறுகியதும், மிகத் தெளிவானதுமாக, சிறியதாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கப் போகும்போது, மற்றவர்களின் கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ள முடியும். நடிகர்கள் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள் ஏனென்றால் அவர்களிடம் சிறந்த கருத்துக்கள் இருக்கலாம். ஒளிப்பதிவாளர் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள், ஏனென்றால் அவர் மிகச் சிறந்த கருத்துக்களைச் சொல்லலாம். நீங்கள் ஒருபோதும் “இல்லை, இல்லை, எனக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்கிற இயக்குனராக இருக்கக் கூடாது. நான் எனது 18வது வயதில் அப்படித்தான் இருந்தேன் என்று நினைக்கிறேன். அது சரியில்லை. எது தேவையென்கிற இறுதி முடிவு உங்களுடையதுதான், ஆனால் அதற்கு முன் எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் சினிமா என்பதே ஒரு கூட்டுமுயற்சிதான். இப்படிச் சொல்வது எனக்குப் பிடிக்கும், ‘கூட்டுமுயற்சி என்பது கலையின் கலவி’ ஏனென்றால் நீங்கள், கூட இருப்பவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எடுத்துக்கொள்கிறீர்கள்.

 

 

காட் ஃபாதர்” படப்பிடிப்பில் மர்லன் பிராண்டோவுடன் கொப்பலா
ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கொப்பலா :

சமீபத்தில் நான் ஒரு படத்தின் (Twixt, 2011) படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சொன்னேன், “நான் இன்று நிறைய கற்றுக்கொண்டேன்” என்று. ஆக, 45 ஆண்டுகள் திரைப்படத் துறையில் இருந்துவிட்டு, ஒரு சின்ன படத்தின் வேலைகளை முடித்து நான் வீட்டுக்குத் திரும்பி ‘இன்று நான் ஏராளமாகக் கற்றேன்’ என்று சொல்லமுடியுமானால், அது சினிமாவைப் பற்றிய ஒன்றை நமக்குக் காட்டுகிறது. ஏனென்றால் சினிமா மிக இளமையானது. அதற்கு வெறும் 100 வயதே ஆகிறது.

திரைப்படத்தின் ஆரம்ப நாட்களிலும், எப்படி திரைப்படம் எடுப்பதென்று யாருக்கும் தெரியாது. அவர்களிடம் ஒரு பிம்பப் படம் இருந்தது, அது அசைந்தது, அதைப் பார்வையாளர்களும் ரசித்தார்கள். ஒரு புகைவண்டி ரயில் நிலையத்துக்குள் வரும் படத்தை, வெறுமனே அசைவின் அழகை ரசிப்பதற்காகவே அப்போது மக்கள் பார்த்தார்கள்.

திரைமொழி என்பது, அசையும் பிம்பங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் தொடர்ச்சியான சோதனைகளின் விளைவாக உருவாகி வந்ததுதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதல் 15-20 ஆண்டுகளுக்குள்ளாகவே அது ஒரு வணிக நிறுவனமாக மாறிவிட்டது. சினிமாவின் மூலம் பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் திரைக்கலையின் ஆரம்ப கர்த்தாக்களைப் பார்த்து “சோதனைகளில் ஈடுபடாதீர்கள். நாங்கள் சம்பாதிக்க வேண்டும். ஆகவே வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா என்று தெரியாத எதையும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்கள்.

எந்தக் கலைக்கும் மிக அடிப்படையான ஒன்று ரிஸ்க். நீங்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை என்றால், முன்பு எப்போதும் பார்த்திராத நிஜமான அழகுள்ள ஒன்றை எப்படி நீங்கள் புதிதாக உருவாக்க முடியும்? ரிஸ்க் இல்லாமல் சினிமா எடுப்பதென்பது, உடலுறவு இல்லாமலே குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பதைப் போன்றது. நீங்கள் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று இதற்குமுன் எடுக்கப்படாத ஒரு படத்தை உருவாக்க விரும்புவதாகச் சொன்னால், அவர் உங்களை வெளியே தள்ளிவிடுவார், ஏனென்றால் அவர்களுக்கு எது வெற்றியடைந்ததோ, எது பணத்தைக் கொட்டியதோ அதேதான் மீண்டும் மீண்டும் வேண்டும். இன்னும் 100 வருடங்களில் சினிமா பெரிய அளவில் மாறிவிடும் என்றபோதும் அந்த மாற்றம் மிக மெதுவாகவே நடக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் இவர்கள்தான் உங்களை ரிஸ்க் எடுக்க விடுவதே இல்லையே.

நான் எந்த சினிமாவில் இருக்க விரும்புகிறேன் என்றால், நூறு வருடங்களுக்கு முன் அது தோன்றிய காலத்தில், எப்படிப் படமெடுப்பது என்றெ தெரியாத, புதிய சாத்தியங்களை நாம்தான் கண்டறிய வேண்டும் என்கிற நிலையில் இருக்கிற சினிமாவில்.

 

 

Francis Ford Coppola
‘ரிஸ்க் எடுப்பவர்’ என்பதே உங்கள் அடையாளம் என்று இப்போது நீங்கள் நினக்கிறீர்களா?

கொப்பலா : நான் எப்போதுமே ஒரு நல்ல சாகஸக்காரன். ரிஸ்க்குகளைப் பார்த்து ஒருபோதும் நான் பயந்தது இல்லை. எனக்கு ரிஸ்க்-ஐப் பற்றி ஒரு நல்ல தத்துவம் எப்போதுமே உண்டு, “ஓ.. நான் இதைச் செய்திருக்கலாமே” என்று நமது மரணப் படுக்கையில் புலம்பும்படியாக நாம் வாழ்க்கையை வீணாக்குவது மட்டும்தான் ஒரே ரிஸ்க். அதுதான் என் தத்துவம். நான் செய்யவிரும்பியவை எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன், இனிமேலும் அப்படியே.
நீங்கள் ஒரு மாணவனுக்குச் சொல்ல விரும்பும் மிகவும் பயனுள்ள குறிப்பு என்ன?

கொப்பலா : நீங்கள் பேப்பரில் ஏதாவது எழுதிவைக்கும்போது முதலில் அந்தத் தேதியை அதில் எழுதுங்கள், எந்த மாதம், என்ன கிழமை, பிறகு அது எந்த இடம் என்பதை எழுதுங்கள். ஏனென்றால் நீங்கள் எழுதிவைக்கும் எந்த ஐடியாவும் உங்களுக்கு உதவக்கூடியதே. தேதியை எழுதிவைப்பதை ஒரு பழக்கமாகக் கொள்வதன் மூலம், பிறகு நீங்கள் எப்போது அந்த குறிப்புகளைப் படித்தாலும், அந்தத் தேதியில் அந்த ஊரில் என்ன நடந்தது என்று உடனே மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிடும், அப்போதே அந்தக் குறிப்பு உங்களுக்குப் பயன்பட ஆரம்பித்துவிடும். எந்தத் திரைப்பட இயக்குனருக்கும் மிகமிக முக்கியமான கருவிகளில் ஒன்று அவர் எழுதிவைத்திருக்கும் குறிப்புகள் தான்.
ஒருவன் தனக்கான பாணியை உருவாக்கிக்கொள்வதற்கு முன்னோடிகளிடமிருந்து முற்றிலும் விலகிச் செல்வது அவசியமானதா?

கொப்பலா : ஒருமுறை பல்ஸாக் (Balzac), வேறொரு இளம் எழுத்தாளர் தன்னுடைய எழுத்தைத் திருடிப் பயன்படுத்திக் கொண்டதைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதைப் படித்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது, அவர் சொன்னார் “அந்த இளம் எழுத்தாளன் என்னிடமிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டதை அறிந்தபோது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியே உண்டானது” என்று. ஏனென்றால் அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறோம். முதலில் நீங்கள் எங்களிடமிருந்து திருட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஏனென்றால் உண்மையில் உங்களால் ‘திருடவே’ முடியாது. நீங்கள் எடுத்துக்கொண்டது எல்லாமே நாங்கள் உங்களுக்குத் தந்ததுதான். நீங்கள் அதை உங்களின் குரலிலேயே பதிவுசெய்வீர்கள். அப்படித்தான் உங்களின் சொந்தக் குரலை நீங்கள் கண்டடைய முடியும்.

அப்படித்தான் நீங்கள் ஆரம்பிக்க முடியும். பிறகு ஒருநாள் இன்னொருவர் உங்களிடமிருந்து திருடிக்கொள்வார். பல்ஸாக் தனது புத்தகத்தில் மேலும் குறிப்பிடுகிறார், ‘அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்ததற்குக் காரணம், அது என்னை மரணமில்லாதவனாக ஆக்குகிறது என்பதுதான். இன்னும் 200 ஆண்டுகள் கழித்து மக்களின் நடவடிக்கைகளில் ஏதோ ஒருவகையில் நானும் கலந்திருப்பேன் என்பதை இதன்மூலம் நான் அறிகிறேன்’ என்று.

ஆகவே உங்கள் கேள்விக்கு எனது பதில் இதுதான், ஒன்றைக் கடனாகப் பெறுவதோ, அல்லது எடுத்துக்கொள்வதோ, அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒருவரைப் போலவே ஒன்றைச் செய்துபார்ப்பதோ, சரியானதுதானா என்கிற கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை. ஏனென்றால் அது உங்களுடைய முதல் காலடி மட்டுமே. நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துத் தானே ஆகவேண்டும்.
ஒரு வளரும் கலைஞன், விநியோகம் மற்றும் வியாபாரத்துடனான இடைவெளியை எப்படி நிரப்பிக்கொள்ள வேண்டும்?

கொப்பலா : அந்த விஷயத்தில் நாம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அதிகபட்சமாக சில நூற்றாண்டுகளாகத்தான் கலைஞர்கள் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். கலைஞர்களுக்கு எப்போதும் பணம் கிடைத்ததில்லை. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு வள்ளல் இருப்பான், அந்த மாநிலத்தின் தலைவனோ, ஒரு பிரபுவோ, அல்லது ஒரு மத நிறுவனமோ இருக்கும். அல்லது அந்தக் கலைஞனுக்கு இன்னொரு தொழில் இருக்கும். எனக்கு அப்படி இன்னொரு தொழில் இருக்கிறது. நான் திரைப்படம் எடுக்கிறேன், ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல முடியாது. நான் என்னுடைய ‘வைன்’ தொழிலின் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறேன். நீங்களும் அதுபோல இன்னொரு வேலையையும் செய்துகொண்டே, காலையில் ஐந்து மணிக்கு எழுந்து உங்கள் திரைக்கதையை எழுதுங்கள்.

‘மெடாலிகா’ அல்லது ஏதாவதொரு ‘ராக் அண்ட் ரோல்’ பாடகர் மாபெரும் பணக்காரராக இருப்பதைப் பற்றிய எண்ணத்தை விடுங்கள், இனி எப்போதுமே அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் நாம் ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை இனி கலைகள் இலவசமாக ஆகிவிடலாம். இப்போது இளைஞர்கள் இசையையும் திரைப்படங்களையும் டவுன்லோடு செய்துகொள்வது சரியானதாகவே கூட இருக்கலாம். இதைச் சொல்வதற்காக என்னைச் சுட்டாலும் சுடுவார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், கலைக்கு கட்டாயம் ஒரு விலை இருக்கவேண்டுமென்று யார் சொன்னது? அப்படியானால் கலைஞர்கள் பணம் சம்பாதிக்கவேண்டுமென்றும் யார் சொன்னது?

பழங்காலத்தில், நீங்கள் ஒரு இசைக் கலைஞரென்றால் உங்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான ஒரே வழி உங்கள் வாத்தியக் குழுவினரைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சி நடத்துவது மட்டும்தான். அப்போது ஒலிப்பதிவு கிடையாது, அதனால் ராயல்டியும் இல்லை. ஆகவே நான் சொல்லுவேன், “சினிமாவுக்கும், பணம் சம்பாதிப்பது வசதியாக வாழ்வது என்பதற்கும் மனதளவில் இருக்கும் தொடர்பைத் துண்டிப்பதற்கு முதலில் முயற்சிசெய்யுங்கள்” ஏனென்றால் அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன.

.

ஒரு திரைக்கதாசிரியருக்கு மிகப் பெரிய சவால் எது?

கொப்பலா : ஒரு திரைக்கதை என்பது ஹைக்கூ போல இருக்கவேண்டும். மிகக் குறுகியதும், மிகத் தெளிவானதுமாக, சிறியதாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கப் போகும்போது, மற்றவர்களின் கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ள முடியும். நடிகர்கள் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள் ஏனென்றால் அவர்களிடம் சிறந்த கருத்துக்கள் இருக்கலாம். ஒளிப்பதிவாளர் சொல்வதை நீங்கள் கேட்பீர்கள், ஏனென்றால் அவர் மிகச் சிறந்த கருத்துக்களைச் சொல்லலாம். நீங்கள் ஒருபோதும் “இல்லை, இல்லை, எனக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்கிற இயக்குனராக இருக்கக் கூடாது. நான் எனது 18வது வயதில் அப்படித்தான் இருந்தேன் என்று நினைக்கிறேன். அது சரியில்லை. எது தேவையென்கிற இறுதி முடிவு உங்களுடையதுதான், ஆனால் அதற்கு முன் எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால் சினிமா என்பதே ஒரு கூட்டுமுயற்சிதான். இப்படிச் சொல்வது எனக்குப் பிடிக்கும், ‘கூட்டுமுயற்சி என்பது கலையின் கலவி’ ஏனென்றால் நீங்கள், கூட இருப்பவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எடுத்துக்கொள்கிறீர்கள்.

 

 

Gene Hackman in ‘The Conversation’
ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது எந்த ஒரு விஷயத்தை முக்கியமாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்?

கொப்பலா : ஒரு படத்தை எடுக்கும்போது, முதலில் அதன் ‘மைய நோக்கம்’ (Theme) என்ன என்பதை, ஒன்று இரண்டு சொற்களுக்குள் வருமாறு கண்டுகொள்ள முடியுமாவென முயற்சிசெய்ய வேண்டும். ஒவ்வொருமுறை நான் படமெடுக்கும்போதும், அதன் ‘தீம்’ என்ன என்று நான் நினைக்கிறேனோ, அதன் மையப் புள்ளியை, ஒரு சொல்லில் அடக்கிவைத்துக்கொள்வேன். “தி காட்ஃபாதர்” படத்தில் அது ‘வாரிசுமுறை’ (Succession), “தி கான்வெர்சேஷன்” படத்தில் அது ‘அந்தரங்கம்’ (Privacy), “அபொகாலிப்ஸ் நவ்”-யில் அது ‘ஒழுக்கம்’.

அதற்கு என்ன அவசியம் என்றால், ஒரு இயக்குனர் எந்த நேரமும் செய்துகொண்டிருக்கும் செயல் ‘முடிவெடுப்பது’ தான். முழுநாளும் அவர் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவுசெய்துகொண்டே இருக்கிறார், ‘நீளமான முடியாக வேண்டுமா குட்டையாகவா?’ ‘பகட்டான ஆடையா அல்லது சாதாரண உடையா?’ ‘தாடி வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா?’.. உங்களுக்குப் பலசமயங்களில் அதற்கான பதில் தெரியாமல் போகலாம். அப்போதெல்லாம் அந்தப் படத்தின் ‘தீம்’ என்ன என்று அறிந்துவைத்திருப்பது உங்களுக்கு உதவும்.

எனக்கு நினைவிருக்கிறது, “தி கான்வெர்சேஷன்” படத்தின்போது, அவர்கள் எல்லாவகைக் கோட்-களையும் கொண்டுவந்து காட்டி, “உங்களுக்கு அவர் ஹம்பிரி போகார்ட் போன்ற டிடெக்டிவ்வாகக் காட்சியளிக்க வேண்டுமா? அல்லது இது போலவா, அது போலவா” என்று பலவாறு கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. நான் படத்தின் தீம் ‘அந்தரங்கம்’ என்று சொல்லிவிட்டு, உள்ளே இருப்பது வெளியே தெரியும் படியான பிளாஸ்டிக் கோட் ஒன்றைத் தேர்வு செய்தேன். ஆக, உங்களுக்கு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாத சமயங்களில் எல்லாம், அந்தப் படத்தின் தீம் என்ன என்று தெரிந்திருந்தால் உங்களுக்கு முடிவெடுப்பது எளிது.

 

Marlon Brando in “Apocalypse Now”
மிகப் பெரிய நடிகர்களைத் திறமையாக வேலைவாங்கும் ரகசியம் என்ன?

கொப்பலா : “த காட்ஃபாதர்” படத்துக்கு நான் எப்படி நடிகர்களைத் தயார் செய்தேன் என்கிற கதையைச் சொல்கிறேன். எங்கள் எல்லாருக்குமே மர்லன் பிராண்டோ பற்றி படபடப்பாகவே இருந்தது. 50களில் நான் நாடக மாணவனாக இருந்தபோது, அவரையே நடிப்பின் உச்சம் என்று வியப்போடு பார்த்திருக்கிறேன். காட்ஃபாதர் படத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட எல்லா நடிகர்களும் முதல் முறையாக சேர்ந்து சந்திக்கவிருந்தார்கள். அல் பாஸினோ, ஜிம்மி கேன், பாபி டுவல், ஜானி கேஸல்.. என்று எல்லாருமே மர்லனின் ரசிகர்கள், அவர்தான் அவர்களுக்கு ஆதர்ஸம் (காட்ஃபாதர்). எனக்கு அது தெரியும் என்பதால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். “கையிலிருக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்து” என்று நெப்போலியன் சொன்னார். ஒரு திரைப்பட இயக்குனர் அவசியம் அதைப் பின்பற்ற வேண்டும்.

ஆக நான் என்ன செய்தேன் என்றால், அந்த முதல் சந்திப்பை ஒரு ‘இம்ப்ரொவைசேஷன்’ நிகழ்வாக ஏற்பாடு செய்தேன். நான் அவர்களிடம் “நல்ல பசியோடு நீங்கள் வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னேன். நான் ஏற்பாடு செய்திருந்த உணவகத்துக்கு அவர்கள் வந்தார்கள். உணவகத்தின் பின்பக்க அறையில் வீட்டில் இருப்பதைப்போன்று ஒரே நீளமான மேசை மட்டும் போடப்பட்டிருந்தது. மேசையின் தலைப் பகுதியில் மர்லனை நான் அமரச் செய்தேன். அவருக்கு வலது புறம் அல் பாஸினோவையும், இடது புறம் ஜிம்மி கேன்-யும் அமர்த்தினேன். தொடர்ந்து பாபி டூவல் மற்றும் ஜானி கேஸல் அமர்ந்தார்கள். ‘கான்னி’ கதாபாத்திரத்தில் நடித்த என் தங்கை தாலியா-வை உணவு பரிமாறும்படிச் சொன்னேன்.

அவர்கள் எல்லாரும் ஒரு டின்னர் இம்ப்ரொவைசேஷனை சேர்ந்து செய்தார்கள். கொஞ்ச நேரத்திலேயே, எல்லாரும் மர்லனை ஒரு தந்தையைப் போல நடத்த ஆரம்பித்தார்கள். அவரைக் கவர்வதற்காக ‘ஜிம்மி கேன்’ ஜோக்குகள் சொல்ல ஆரம்பித்தார். ‘அல் பாஸினோ’ அவர் முன்னால் தன்னை அமைதியானவனாகவும் அழுத்தமானவனாகவும் காட்டிக்கொண்டார். உணவைப் பரிமாறும் என் தங்கை மிகுந்த மிரட்சியோடு இருந்தாள். அந்த டின்னர் முடிந்தபோது அவர்கள் எல்லாருமே கதாபாத்திரங்களாகவே மாறியிருந்தார்கள். ஆக நான் தரும் உபயோகக் குறிப்பு இதுதான், இம்ப்ரொவைசேஷன் சமயத்தில் நடிகர்களை ஒன்றச் செய்வதற்கு ஒரு சிறந்த வழி, உணவு உண்பது, கைகளால் ஒன்றைச் செய்து உருவாக்குவது போல அவர்களின் புலன்களோடு நுட்பமான தொடர்புடைய ஏதாவதொரு செயலைச் செய்யவைக்க வேண்டும்.

 

 

ஒரு நாவலை திரைக்கதையாக நீங்கள் எப்படி மாற்றுவீர்கள்?

கொப்பலா : வழக்கமாக நாவல்களையே ‘அடாப்ட்’ செய்கிறார்கள். ஆனால் அது திரைப்படத்துக்கு தகுந்த வடிவம் கொண்டது அல்ல. ஏனென்றால் ஒரு நாவல் என்பது மிகமிக அதிக நீளமானதாக, ஏராளமான கதாபாத்திரங்களும், நிறைய தனித்தனிப் பகுதிகளும் கொண்டதாக இருக்கும். சிறுகதையே ஒரு திரைப்படத்துக்கான இயல்பான வடிவமைப்பை, நேர்கோடான கதைசொல்லலைக் கொண்டிருக்கிறது. ஏராளமான சிறுகதைகள் நல்ல திரைப்படங்களாக மாறியிருக்கின்றன.

நாவலைப் பொறுத்தவரை, நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான், ஒரு நாவலை முதல் முறை படிக்கும்போதே நிறைய குறிப்புகளை அந்த புத்தகத்திலேயே எழுதிவைத்துவிடுங்கள். உங்கள் உணர்வையெல்லாம் எழுதுங்கள், நீங்கள் வலிமையானது என்று நினைக்கும் வரிகளை அடிக்கோடிடுங்கள். அந்த முதல் குறிப்புகள் எப்போதும் மதிப்புமிக்கவை. நீங்கள் படித்து முடிக்கும்போது, புத்தகத்தின் சில பக்கங்கள் அடிக்கோடுகளாலும் குறிப்புகளாலும் நிரம்பியிருப்பதையும், சில பக்கங்கள் வெறுமையாய் இருப்பதையும் காண்பீர்கள்.

நாடகங்களில் ‘பிராம்ப்ட் புத்தகம்’ என்று ஒன்றுண்டு. மேடையின் மேலாளர் அதைக் கையில் வைத்திருப்பார். வழக்கமாக அது, நாடக வசனங்களும், எல்லா ஒளியமைப்பு ‘க்யூ’-களும் கொண்ட தனித்தாள் தொகுப்பாக இருக்கும். அதைப் போன்ற ஒரு பிராம்ப்ட் புத்தகத்தை நான் நாவலிலிருந்து உருவாக்குவேன். வேறு சொற்களில் சொல்வதானால், நான் நாவலைப் பிய்த்து, பக்கங்களை ஒரு சதுர லூஸ் லீஃப்-யில் இருபுறமும் பார்க்கும் விதமாக ஒட்டி வைப்பேன்.

நான் எடுத்த குறிப்புகளடங்கிய அந்தப் பெரிய புத்தகத்தை வைத்துக்கொண்டு, மேலும் கூர்ந்து அவதானித்து, இன்னும் நிறைய குறிப்புகளையும் சேர்த்து எழுதிவைத்துக்கொள்வேன். பின்பு அவற்றையெல்லாம் படித்துப்பார்த்து, நான் பயனுள்ளது என்று நினைப்பவற்றைக் கதைச் சுருக்கம் போல எழுதத்தொடங்குவேன். இப்போது மிக இயல்பாகவே கதையின் உதிரிப் பகுதிகள் விலகி விழுந்துவிடும். அல்லது தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள் இருப்பதையும், எதையெல்லாம் கழிக்க வேண்டும், எதையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையும் நீங்களே கண்டுகொள்ள முடியும். வெளியிலிருந்து உள்நோக்கிய இந்த வழிமுறை மூலமாக, நீங்கள் நினைப்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு உருவாகும். அதன் பின்பே, அந்தக் குறிப்பேட்டை மூலாதாரமாகக் கொண்டு ஒரு திரைக்கதையை எழுதிப் பார்க்கும் தகுதியை நீங்கள் அடைகிறீர்கள்.

“காட்ஃபாதர்”-யில் நான் அதைச் செய்தேன். படத்திற்கென்று ஒரு திரைக்கதையை எழுதிவிட்ட பின்னும் கூட நான் அதைப் பயன்படுத்தவில்லை. அந்தப் பெரிய குறிப்புப் புத்தகத்தை நான் எப்போதும் கூடவே வைத்திருந்தேன். அந்தப் படத்தை நான் அந்தக் குறிப்புப் புத்தகத்தைக்கொண்டு உருவாக்கினேன் என்பதே உண்மை. “அபோகாலிப்ஸ்” படத்தைப் பொறுத்தவரை, மிகச் சிறந்த திரைக்கதாசிரியரான ‘ஜான் மிலியஸ்’ எழுதிய திரைக்கதை என்னிடம் இருந்தது. ஆனால் உண்மையைச் சொல்வதானால், ‘ஹார்ட் ஆஃப் டார்க்னஸ்’ புத்தகத்தின் சிறிய பிரதியையும் அதில் நான் எழுதிவைத்த ஏராளமான குறிப்புகளையும் கொண்டே நான் அந்தப் படத்தை எடுத்தேன். நான் எந்த ஒரு காட்சியை எடுக்கும்போதும், அந்தப் புத்தகத்தோடு ஒரு முறை சரிபார்த்துக்கொள்வேன், ‘கான்ராட்’-யின் எழுத்திலிருந்து அந்தப் படத்துக்கு எதையெல்லாம் கடத்த முடியுமென்று நான் பார்ப்பேன்.

 

 

அபொகாலிப்ஸ் நவ்’ படப்பிடிப்பில் கொப்பலா
சொந்தமாகப் படம் தயாரிப்பதற்கும், எழுதுவதற்கும், இயக்குவதற்கும் தேவையான அனைத்து மூலதன வசதிகளும் இப்போது உங்களிடம் இருக்கின்றன. ஒரு கலைஞராக உங்களின் முன் இருக்கும் பெரிய தடை எது?

கொப்பலா : தன்னம்பிக்கை இன்மை. தனது போதாமையைப் பற்றிய எண்ணத்திடம் தான் ஒரு கலைஞன் ஓயாமல் போராடிக்கொண்டிருக்கிறான்.

நீங்கள் அதை எப்படிக் கடந்து வந்தீர்கள்?

கொப்பலா : நான் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். எனது இளமைக் காலத்தில் படப்பிடிப்பின்போது, அந்தக் காட்சியை நான் அப்படியே நிகழ்த்திக்காட்ட முயற்சிப்பேன், நடிகர்கள் தங்கள் வசனங்களை வாசிப்பார்கள், நான் “சரி, நீங்கள் இங்கே நில்லுங்கள், அவர் அங்கே உட்காரட்டும்..” என்று சொல்லிச் செல்வேன். உடனே அவர்கள் “அது வந்து.. நான் இங்கே உட்காரக் கூடாதென்று நினைக்கிறேன், நான் அங்கேதான் நிற்க வேண்டும், மேலும் இந்த வசனம் சரியல்ல என்று தோன்றுகிறது” என்று அனைத்தையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள்.

நான் என்ன கற்றுக்கொண்டேன் என்றால், மிக எளிய விஷயம்தான், நீங்கள் காட்சிப்படுத்தும் போது, ஒரு ‘கேக்’கை ‘அவன்’ (oven)-யில் வைப்பதைப்போல, அதற்கு இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். ஒரு காட்சி உடனே உருவாகி வந்துவிடாது, அதைக் கொஞ்ச நேரம் வேகவைக்க வேண்டும். ஒரு ‘ஷாட்’டோ அல்லது ஒரு காட்சியோ உங்கள் எண்ணத்தில் தோன்றியதும், அது திரைப்படங்களில் இருக்கும் மிக அழகிய காட்சிகளாக உடனேயே உருவாகிவிடும் என்று எதிர்பார்ப்பது அநியாயம். அது முதிர்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். ஒரு நிமிஷம் கூட ‘அவன்’-யில் வைக்காமல் வெளியே எடுக்கப்படும் கேக் எத்தனைக் கொடுமையாக இருக்கும்? ஆகவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மெல்ல மெல்ல அனைவருமே உங்களுடைய எண்ணம் சரியானதே என்பதை உணர ஆரம்பிப்பார்கள், அல்லது திருத்தங்களைச் செய்வார்கள். காட்சி திடமானதாக மாறும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதன் மூலம், உங்களுடைய நம்பிக்கைக் குறைவை வெற்றிகொள்ள முடியும்.

தமிழாக்கம்: சார்லஸ்
திரைப்பட இயக்குநர்
Referred by: Vijay Armstrong

x
^