நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின்’ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், ஆகஸ்ட் (2016) மாதம் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் ‘ருஷ்யன் கலாச்சார மையத்தில்’ கூட்டப்பட்டது. இதில், நமது சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு, மிக முக்கியமான முடிவுகளை ‘குரல் வாக்கெடுப்பு’ மூலம் நிறைவேற்றினார்கள்.