சென்னை, பிரசாத் லேபில் அமைந்திருக்கும் திரையரங்கில் ‘இருமுகன்’ தமிழ்த்திரைப்படம், நமது தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பின்பு, அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.R.D.ராஜசேகர் அவர்களோடு, நமது சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள். இத்திரைப்படத்தில் இரட்டை வேடமிட்டிருந்த திரு.விக்ரம் அவர்களின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப, எப்படி ஒளியமைப்பு வேறுபடுத்தி அமைக்கப்பட்டது என்பதையும், இத்திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களையும் திரு. R.D.ராஜசேகர் அவர்கள் உறுப்பினர்களோடு பகிர்ந்துக்கொண்டார். மேலும், தம்மோடு பணிபுரிந்த ‘ஃபோகஸ் புல்லர்’ மற்றும் ‘ஸ்டடிகேம் ஆப்ரேட்டர்’ இருவரையும் மேடை ஏற்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தி, இத்திரைப்படத்தில் அவர்களின் சிறப்பான பங்களிப்பைப்பற்றி பேசி, அவர்களுக்கு மதிப்பு செய்தார்.